ADDED : பிப் 10, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் சரவணன் 31. இவர் புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்தார்.
பிப்.7ல் தனது ஊரிலிருந்து பழநிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். நத்தம் மெய்யம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்து வந்தபோது திண்டுக்கல் நோக்கி வந்தஅரசு பஸ் இவர் மீது மோதி இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.