/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்
/
பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஏப் 22, 2024 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு நேற்று காலை முதல் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். அலைபேசி வைக்கும் இடங்களில் அதிகளவில் பக்தர்கள் திரண்டனர். அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. கிரி விதிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கிரி விதிக்கு செல்லும் ரோடுகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு கோயில் பாதுகாவலர்கள் பணியில் உள்ளனர்.

