ADDED : மார் 26, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சந்தன காவடி, இளநீர் காவடி, பால் காவடி, உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். அடிவாரம் கிரிவீதி பகுதிகளில் அலகு குத்தி, காவடி எடுத்து மேளதாளத்துடன், அரோகரா கோஷத்துடன் காவடியாட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் ஆடி கிரி வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

