ADDED : ஏப் 29, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கோயிலில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வின்ச், ரோப்கார் மூலம் முருகன் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய மலை கோயிலில் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வரிசையில் நின்ற பக்தர்கள் வெயிலின் தாக்கத்தால் குடை பிடித்துநின்றனர்.
அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. கிரி விதிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிரி வீதியில் டூவீலர்கள் அனுமதி இல்லாததால் சாலைகளில் டூவீலர்களை நிறுத்திச் சென்றனர்.

