/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி; அலைகடலென திரண்ட மாணவர்கள் ; கல்வி அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெற்றோர்
/
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி; அலைகடலென திரண்ட மாணவர்கள் ; கல்வி அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெற்றோர்
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி; அலைகடலென திரண்ட மாணவர்கள் ; கல்வி அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெற்றோர்
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி; அலைகடலென திரண்ட மாணவர்கள் ; கல்வி அரங்குகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட பெற்றோர்
UPDATED : மார் 31, 2024 07:38 AM
ADDED : மார் 31, 2024 06:40 AM
திண்டுக்கல், : தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியை தேர்வு செய்யும் வகையில் கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே., மஹாலில் நேற்று மாணவர்களின் ஆரவாரத்துடன் துவங்கியது.
ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வு முடிந்த பின் நடத்தப்படும் தினமலர் வழிகாட்டியை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள், பெற்றோர் முதல்நாள் நிகழ்ச்சியில் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றனர்.
முதல்நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியை கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், விஞ்ஞானி டில்லிபாபு, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார், மாணவர்கள் ஆதித்யா, அக் ஷயா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
கல்வி நிறுவனங்களின் அரங்கு களை கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் திறந்து வைத்தார். நாகர்கோவில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் முதல்வர் கண்ணன், மதுரை தினமலர் விளம்பர மேலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரே இடத்தில் விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை
பி.வி.கே., மஹால் அரங்கில் கல்வி நிறுவனங்களின் கண்காட்சி காலை 10:00 மணி முதல் இடைவேளையின்றி மாலை 6:30 மணி வரை நடந்தன. இதில் மாணவர், பெற்றோர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே பெற்றோர் கேட்டு தெரிந்து கொண்டர். மேலும் கல்லுாரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், முந்தைய மாணவர்கள் பெற்ற வேலைவாய்ப்புகள், கல்விக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பெற்றோர் ஆர்வமாக விசாரித்து தெளிவு பெற்றனர். விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரை ஒரே கூரையின் கீழ் இருந்ததால் தேவையான உயர்கல்வி ஆலோசனைகளை பெற்றோர் எளிதில் தெரிந்து, எந்த கல்லுாரியில் சேர்க்கலாம் என்ற முடிவை எடுத்தனர். இதன் மூலம் கல்லுாரிகளை தேடிச் சென்று அலைய வேண்டிய வேலை தவிர்க்கப்பட்டது என பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பவர்டு பை பங்களிப்பாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம் செயல்படுகின்றன. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்குகிறது.

