ADDED : மார் 08, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : - கோம்பைப்பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்காததை கண்டித்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்கியதாக பொய்யான தகவலை கொடுக்கும் ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர்களின் செயல்பாட்டை கண்டித்து தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.