/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
/
மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 18, 2024 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் வரும் திண்டுக்கல் சட்டசபை தொகுதி ஓட்டு சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தது.
இன்று தேர்தல் நடக்க உள்ளநிலையில் நேற்றே அந்தந்த ஓட்டுசாவடிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது. இதற்காக போலீசார்,அரசு அலுவலர்கள் காலை முதல் மாநகராட்சி அலுவலத்தில் குவிந்தனர். டி.ஆர்.ஓ.,சேக்முகைதீன் உள்ளிட்ட அதிகாரிகள் ஓட்டு பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தனர். அதன்பின் மினிலாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டுசாவடி மையங்களுக்கு சென்றது.

