/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்களுக்கு பரிசளித்த தி.மு.க.,
/
மாணவர்களுக்கு பரிசளித்த தி.மு.க.,
ADDED : செப் 01, 2024 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,11,12 வகுப்புகளில் தலா முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நகர தி.மு.க., சார்பில் பேரூராட்சி தலைவர் கருப்பன் பரிசுத் தொகை, கேடயம் வழங்கினார்.
தலைமை ஆசிரியர் மனோகரி, மேலாண்மை குழு தலைவர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். பி.டி.ஏ., சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், முருகன், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, தனலட்சுமிசிவக்குமார், தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ், நகர துணை செயலாளர் சவுந்தரபாண்டி, கோயில்தோட்டம் பேசும்பழனியாண்டவர் கோயில் நிர்வாகி செந்தில்நாதன் பங்கேற்றனர்.