ADDED : ஜூலை 26, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : பண்ணைக்காடு வாழைகிரி ரோட்டில் காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
தடியன்குடிசைப் பகுதியில் சில தினங்களாக முகாமிட்டிருந்த காட்டுயானை பண்ணைக்காடு எதிரொலிபாறை வழியாக வாழைகிரி சென்றது. அவ்வழியே ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது.
தொடர்ந்து பூலத்துார் பகுதி விளை பொருட்களை சேதப்படுத்தியது. பெரும்பள்ளம் வனத்துறையினர் ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.