sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

/

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு; அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் ஜோர்

1


ADDED : ஜூலை 10, 2024 05:50 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 05:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளின் ரோட்டோரங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் பின்புலத்தில் இது போன்ற ஆக்கிரமிப்புகள் ஜோராக நடந்து வருகின்றன.

ரோடுகள் மட்டும் ஆக்கிரமிக்கப்படுவதில்லை குளம், கண்மாய் தொடங்கி அனைத்துமே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. புதிய கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் என கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.

இதில் கோயில் நிலங்களும் விதிவிலக்கல்ல. ஏதேனும் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சென்றால் அரசியல் கட்சியினரின் தலையீடுகள் அதிகளவில் உள்ளன. சமீப காலமாக இது அதிகரித்துள்ளது. இதனால் அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கம் காட்டுகின்றனர்.

பொதுமக்கள் ஆக்கிரமிப்பு என தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். ஆனால் தீர்வுகள் ஏதும் கிடைப்பதில்லை.

சாமன்ய மக்களின் வறுமையை பயன்படுத்தி அரசியல் கட்சியினர் இது போன்ற அரசு நிலங்களில் உள்வாடகைக்கு விடும் சூழலும் இருக்கிறது.இது போன்ற ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us