sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாயோடைக்கு வரத்து நீர் துவக்கம் யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம்

/

நாயோடைக்கு வரத்து நீர் துவக்கம் யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம்

நாயோடைக்கு வரத்து நீர் துவக்கம் யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம்

நாயோடைக்கு வரத்து நீர் துவக்கம் யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம்


ADDED : ஆக 22, 2024 03:32 AM

Google News

ADDED : ஆக 22, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி: கன்னிவாடி நாயோடை நீர்தேக்க நீர் பிடிப்பு பகுதிகளில் மழையால் நாயோடைக்கு வரத்து நீர் வர துவங்கியுள்ள நிலையில், யானை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னிவாடி நாயுடு நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது .இங்கிருந்து கன்னிவாடி பேரூராட்சி கசவனம்பட்டி கோனுார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட குக்கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த்தேக்கம் போதிய பராமரிப்பின்றி துார்ந்துள்ளது. கூடுதலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கரை, ஷட்டர் பராமரிப்பின்றி எல்லைக்கான குறியீட்டு கற்களும் ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்பட்டுள்ளன.

போதிய பராமரிப்பற்ற சூழலில் நீர்த்தேக்கத்தில் குறிப்பிடத்தக்க தண்ணீர் தேங்கவில்லை. வரத்து நீரும் இல்லாத நிலையில் நீர்த்தேக்கம் வறண்டு, புதர் மண்டி உள்ளன.இச்சூழலில் சமீபத்திய மழையால் நீர்தேக்கத்திற்கு நாயோடையில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. பெரிய பள்ளங்கள் உள்ள நிலையில் இதில் குட்டை போல் தண்ணீர் தேங்க துவங்கி உள்ளது.இதனிடையே சில வாரங்களாக இப்பகுதியில் யானை நடமாட்டம் தொடர்வதால் விவசாயிகள் நீர்த்தேக்க பகுதிக்கு செல்லவும் அச்சப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us