/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள்
/
உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்ட விவசாயிகள்
ADDED : ஜூலை 23, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி உழவர் சந்தையில் கடைகள் முறையாக அனுமதிக்க கோரி விவசாயிகள் அலுவலரை முற்றுகையிட்டனர்.
பழநி உழவர் சந்தைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சில நாட்களாக உழவர் சந்தையில் வியாபாரிகள் ஆதிக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று காலை விவசாயிகளுக்கு உரிய கடைகளை ஒதுக்கவில்லை என கூறி விவசாயிகள் உழவர் சந்தை அலுவலரை முற்றுகையிட்டனர். பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.