sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்

/

வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்

வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்

வனவிலங்குகளால் அச்சத்தில் விவசாயிகள் தினம் தினம் அவதி: பயிர்களை சேதம் செய்வதால் பெரும் நஷ்டம்


ADDED : ஜூன் 07, 2024 06:56 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பல்வேறு மரங்களும், அரிய வகை மூலிகைகளும் உள்ளன. இதோடு யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு , பன்றிகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் மலை அடி வாரத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை நாசம் செய்கிறது. வனப்பகுதி யொட்டிய விளைநிலங்களில் தென்னை, வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி வரும் காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை சேதம் செய்து வருகிறது.

இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைகின்றனர். அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகளை சிரமம் அடைகின்றனர்.

யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வதோடு விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது.

சில நாட்களாக பழநி அருகே வரதமாநதி அணை, கோம்பைபட்டி, ஆயக்குடி, பாலாறு பொருந்தலாறு அணை பகுதிகளில் யானை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

காட்டுப்பன்றிகள் வனப்பகுதி அருகில் மட்டுமில்லாமல் ஆற்றுப்பகுதி புதர்களில் மறைந்திருந்து இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து விலை பொருட்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பு அடைகின்றனர். இதன் மீது வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us