ADDED : மார் 11, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பற்றி புகைமண்டலமாக இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் அவதிப்படுகின்றனர்.
பழநி நகராட்சி குப்பை கிடங்கில் 33 வார்டு குப்பைகளும் கொட்டப்படுகிறது. இங்கு சில வாரங்களாக தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.
புகைமண்டலம் அருகிலுள்ள குடியிருப்பு, தக்காளி மார்க்கெட் பகுதியிலும் பரவி உள்ளது. இதனால் சுவாச கோளாறு, மூச்சுத் திணறல், சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.