ADDED : ஆக 13, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சத்துணவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவுஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராமு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மணிக்காளை முன்னிலை வகித்தார்.
மாநிலப் பொதுச் செயலர் மலர்விழி ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்