sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மறியல்

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மறியல்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மறியல்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மறியல்


ADDED : ஜூலை 15, 2024 04:25 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை, : வடமதுரை அருகே ஏலச்சீட்டு நடத்தி வசூலான ரூ.2.50 கோடியுடன் தலைமறைவானவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தியான பாதிக்கப்பட்டோர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

வடமதுரை தென்னம்பட்டி தோணிகவுண்டன்புதுாரை சேர்ந்த தர்மராஜ் 54. இப்பகுதியில் தொடர்ச்சியாக 10க்கு மேற்பட்ட ஏலச்சீட்டுகளை நடத்தினார். துவக்க ஆண்டுகளில் நேர்மையாக குறித்த நேரத்தில் ஏலச்சீட்டு தொகையை பட்டுவாடா செய்ததால், பலரும் நம்பிக்கையுடன் இவரது ஏலச்சீட்டுகளில் சேர்ந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு இறுதியில் ரூ.2.50 கோடிக்கு அதிகமான தொகையுடன் தர்மராஜ் தலைமறைவானார். தான் வசித்த வீட்டினை தனது மகளுக்கு பத்திரப்பதிவு செய்துவிட்டு தற்போது சென்னையில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.

தர்மராஜின் ஏலச்சீட்டில் சேர்ந்து பணத்தை இழந்தவர்கள் கடந்த பிப்.ல் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தந்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் விரக்தியில் இருந்தவர்கள் நேற்று மதியம் திடீரென வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் சமரசம் செய்யவே மறியல் செய்தோர் கலைந்தனர்.






      Dinamalar
      Follow us