/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண் போல கையெழுத்திட்டு ரூ.50 லட்சம் மோசடி:ஒருவர் கைது
/
பெண் போல கையெழுத்திட்டு ரூ.50 லட்சம் மோசடி:ஒருவர் கைது
பெண் போல கையெழுத்திட்டு ரூ.50 லட்சம் மோசடி:ஒருவர் கைது
பெண் போல கையெழுத்திட்டு ரூ.50 லட்சம் மோசடி:ஒருவர் கைது
ADDED : ஆக 14, 2024 08:55 PM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி பங்குதாரருக்கு தெரியாமல் அவர்போல் போலியாக கையெழுத்திட்டு தனியார் வங்கிகளில் ரூ.50 லட்சம் லோன் வாங்கி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் கல்பனா. ரவிக்குமார் அவரது மனைவி தீபா. ஆகியோர் சேர்ந்து திண்டுக்கல் நத்தம் ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தனர். மூவரும் பங்குதாரராக நிறுவனத்தை நடத்துவதால் எல்லா ஆவணங்களிலும் மூவரும் கையெழுத்திட வேண்டும். ரவிக்குமார்,தீபா இருவரும் கல்பனாவுக்கு தெரியாமல் அவர்போல் கையெழுத்திட்டு அவரது பெயரிலேயே திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு தனியார் வங்கிகளில் ரூ.50 லட்சம் லோன் வாங்கி மோசடியில் ஈடுபட்டனர்.
2023ல் இந்த விவகாரம்கல்பனாவிற்கு தெரிந்தநிலையில் அவர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமிதலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று திண்டுக்கல் பழநி ரோட்டில் தன் வீட்டில் பதுங்கியிருந்தரவிக்குமாரை,போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி தீபாவை, தேடுகின்றனர்.