ADDED : ஆக 27, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : மதுரை திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல் தரகுமண்டி குமஸ்தாக்கள் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் லோகநாதன் வரவேற்றார். செயலாளர் பிரியம் நடராஜன் , சென்னை கிருஷ்ணா வரதராஜன் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் , பரமசிவம், தென்னம்பட்டி பழனிச்சாமி பரிசு வழங்கினர். பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
10ம் வகுப்பில் 360, பிளஸ் 2 ல் 225, நீட்டில் வென்ற 150 மாணவர்களுக்கு கேடயம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

