ADDED : ஆக 22, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அரசு வீடு திட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுப்பது ,வரிவசூல், மின் கட்டண வரி செலுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா,சுமதி தலைமை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜினி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.