sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை

/

அரசு கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை

அரசு கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை

அரசு கல்லுாரி விரிவுரையாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் இல்லை


ADDED : ஜூலை 18, 2024 07:43 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 07:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு:அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளமும் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை.

மே மாதம் விடுமுறை என்பதால் ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக வழங்கப்படாததால் குழந்தைகளை பள்ளி, கல்லுாரிகளில் சேர்ப்பது, மருத்துவச் செலவு, வீடு வாடகை, குடும்ப செலவு, அன்றாட செலவு என வாழ்வாதாரப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவர் சேர்க்கை, விடைத்தாள் திருத்தும் பணி, அக மதிப்பீட்டு படி என தொடர் பணிகளில் ஈடுபடும் இவர்களுக்கு முறையாக சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us