ADDED : ஜூன் 07, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஜூன் 8-
தென்னம்பட்டி எலப்பார்பட்டியில் வேடசந்துார் எம்.எல்.ஏ., வீரா சாமிநாதன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் சென்றார். அனைவருக்கும் பேனா வழங்கி அவர் பேசுகையில், ‘‘குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். அவர்களது கல்விக்கான உதவிகளை செய்ய தயாராக உள்ளனே்’’ என்றார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், சசிக்குமார் உடன் இருந்தனர்.
