sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதலாம்: ஆய்வாளர் வலியுறுத்தல்

/

சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதலாம்: ஆய்வாளர் வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதலாம்: ஆய்வாளர் வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதலாம்: ஆய்வாளர் வலியுறுத்தல்


ADDED : செப் 13, 2024 05:39 AM

Google News

ADDED : செப் 13, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: ''சுதந்திர போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுதப்பட வேண்டும்''என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன நுாலகர் ஆய்வாளர் ரெங்கையா முருகன் பேசினார்.

காந்திகிராமம் பல்கலையில் தமிழ்த்துறை சார்பில் நடந்த பாரதியார் நினைவு தின கருத்தரங்கில் அவர் பேசியதாவது : இந்திய சுதந்திர போராட்டம் வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் அறிவு சார்ந்த செயல்பாடாக முன்னெடுக்கும் போது ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை சமூக அரசியல் செயல்பாடுகளாக தமிழகத்தில் வ.உ.சி., பாரதியார் சுப்பிரமணிய சிவா முன்னெடுத்தனர்.

சுதந்திர போரின் பெரும் பகுதியை பாரதியாரின் பாடல்களும், வ.வெ.சு.,ஐயரின் எழுச்சியும், வ. உ. சி., யின் பேச்சும் சுப்பிரமணிய சிவாவின் ஆவேசமும் கட்டமைத்தன.

இதற்கேற்ப இந்திய சுதந்திரத்தின் போராட்ட வரலாறை திருநெல்வேலியை மையப்படுத்தி எழுத வேண்டும் என்றார். துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.

பேச்சு ,கவிதை போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு துணைவேந்தர் பரிசு வழங்கினார்.

பாரதியார் ஆய்வக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். இந்திய மொழிகளின் புல முதல்வர் முத்தையா, உதவி பேராசிரியர் சிதம்பரம் பேசினர்.






      Dinamalar
      Follow us