ADDED : மார் 06, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: : எஸ்.மேட்டுப்பட்டியில் வசிக்கும் தனபாண்டி என்பவர் தனது ஊராட்சியில் நடந்த திட்டங்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கள ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தார்.
பொது தகவல் அதிகாரி நம்பி தேவி, தனபாண்டிக்கு அனுமதி வழங்கி கள ஆய்வு செய்ய உத்தரவிட்டார். எஸ்.மேட்டுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.