sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது

/

ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது

ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது

ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது


ADDED : ஜூலை 24, 2024 05:39 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.டி.சி.,யிடம் முறையான உரிமம் பெறாமல் ரயில் டிக்கெட்டை திண்டுக்கல்லில் 6 மாதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் முத்துநகரை சேர்ந்தவர் கண்ணன்56. இப்பகுதியில் சேவை மையம் நடத்துகிறார். ரயில் டிக்கெட் முன்பதிவும் செய்தும் கொடுத்தார். ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.டி.சி.,யிடம் முறையான உரிமம் பெறாமல் கூடுதலாக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்த தகவல் டெல்லி ஐ.ஆர்.டி.சி.,தலைமை நிர்வாகத்திற்கு தெரியவர, மதுரை ஸ்பெஷல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்களும் ,திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து கண்ணனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us