/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தேரோட்டம்
/
கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தேரோட்டம்
ADDED : மே 22, 2024 07:31 AM

நத்தம் : நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா மே 14 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில்,பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளினார்.
நேற்று முன்தினம் கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை 9:15 மணிக்கு அதிர்வேட்டுக்கள், சிவாச்சாரியர்களின் மந்திரங்கள் முழங்க தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள் தேரின் வடங்களை பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். மூலவர் ,சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது.
இன்று பூப்பல்லாக்கு, நாளை உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஹிந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி,செயல் அலுவலர் பால சரவணன் பங்கேற்றனர்.

