sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குமரபட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

/

குமரபட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குமரபட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குமரபட்டி பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 27, 2024 05:33 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: - நத்தம் அருகே குமரபட்டி பகவதி அம்மன்,வெற்றி விநாயகர், பழனி ஆண்டவர் கோயில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி நேற்று முன்தினம் கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் திருமறை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனி பூஜை, வாஸ்து சாந்தி, திக் பந்தனம், பிரவேச பலி, விருச்சகிரணம், அங்குரார்பணம், ரக் ஷா பந்தனம், முதற்கால யாகசால பூஜை ,வேத பாராயணம், திருவியாகுதி, மூல மந்திரஹோமம் நடத்தப்பட்டது.

நான்காம் கால யாகசாலை பூஜைகளுக்கு பின் ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த காசி, ராமேஸ்வரம், அழகர்மலை, கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. சுற்றுவட்டாரம், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு புனித தீர்த்தம், பூஜை மலர்கள் வழங்க அன்னதானம் நடந்தது.

கோபால்பட்டி: அருகே கணவாய்ப்பட்டி செம்மேடு ஒளியநாயகி அம்மன், மாலையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி நேற்று முன்தினம் திருமுறை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி, தீக்பந்தனம், பிரவேசபலி, மிருச்சங்கிரணம், அங்குரார்பணம், ரஷாபந்தனம், கலாகர்சணம், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் நடந்தது.

நேற்று விக்னேஸ்வரபூஜை, புண்ணியாக வாசனம், மண்டபசாந்தி, பிம்பசத்தி, லட்சமி பூஜை, கோ பூஜைகளைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன் கும்பங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us