/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
/
முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 09, 2024 04:26 AM

நத்தம் : நத்தம் ஆவிச்சிபட்டி பன்னியாமலையில் முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லெட்சுமி பூஜை, கணபதிஹோமம் முதல் காலயாக பூஜைகள் நடந்தது.
நேற்று 2ம் கால யாகசாலை பூஜை,காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி,கரந்தமலை, அழகர்மலை பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
* நத்தம் குட்டுப்பட்டி கிராமம் ஒத்தினிப்பட்டியில் நான்கு கிராமத்திற்கு பாத்தியப்பட்ட வெங்கலநாச்சியம்மன், கரையம்மன், தெற்கு காட்டு கருப்பர், வடகாட்டான், சாஸ்தா அய்யனார் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.