/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்சாரம் தாக்கியதில் ' குட்டைக்கொம்பு' பலி 3 ஆண்டிற்கு முன் உயிர்பலி ஏற்படுத்திய ஒற்றை யானை துாக்கத்தை கெடுத்த யானை
/
மின்சாரம் தாக்கியதில் ' குட்டைக்கொம்பு' பலி 3 ஆண்டிற்கு முன் உயிர்பலி ஏற்படுத்திய ஒற்றை யானை துாக்கத்தை கெடுத்த யானை
மின்சாரம் தாக்கியதில் ' குட்டைக்கொம்பு' பலி 3 ஆண்டிற்கு முன் உயிர்பலி ஏற்படுத்திய ஒற்றை யானை துாக்கத்தை கெடுத்த யானை
மின்சாரம் தாக்கியதில் ' குட்டைக்கொம்பு' பலி 3 ஆண்டிற்கு முன் உயிர்பலி ஏற்படுத்திய ஒற்றை யானை துாக்கத்தை கெடுத்த யானை
ADDED : மே 05, 2024 12:21 AM

கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் தோணிமலையில் உயரழுத்த மின்கம்பியை இழுத்த 'குட்டைக்கொம்பு 'ஒற்றை யானை மின்சாரம் தாக்கி பலியானது. இதுதான் 3 ஆண்டுகளுக்கு முன் உயிர்பலி ஏற்படுத்தியதாகும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன்னிவாடி அருகே தோணிமலை காப்புக்காட்டில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், உதவி வனபாதுகாவலர் வேலுமணி நிர்மலா தலைமையில் அங்கு சென்றனர். உயரழுத்த மின்கம்பியை இழுத்ததில் 25 வயதுடைய ஆண் யானை மின்சாரம் தாக்கி இறந்தது தெரிந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அதே பகுதியில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உயரழுத்த மின்கம்பி பகுதியை கடந்து செல்ல முயன்றபோது தாழ்வாக இருந்த கம்பியை அகற்றும் முயற்சியில் மின்சாரம் தாக்கி யானை இறந்திருக்கலாம். கன்னிவாடி வனப்பகுதியில் சில ஆண்டுகளாக உயிர் பலி ஏற்படுத்திய குட்டைக்கொம்பு ஒற்றை யானை என இப்பகுதியினர் கூறினர். உடல் பெரிதாக இருந்த நிலையில் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது என்றனர்.
-