/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......
/
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம் பகுதிக்காக......
ADDED : மே 09, 2024 06:22 AM
பயன்பாடில்லா பூங்கா நிலம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி 12 வது வார்டில் உள்ள பூங்கா இடம் பயனின்றி உள்ளது. பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ---முகமது இஸ்மாயில், ஒட்டன்சத்திரம்
நடவடிக்கை எடுக்கப்படும்
ஒட்டன்சத்திரம் நகராட்சி 12 வது வார்டில் உள்ள பூங்கா இடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
- -முகமது மீரான், கவுன்சிலர், ஒட்டன்சத்திரம்.
-----------------நிழற்குடை சேதம்
சுக்காம்பட்டி அயினாம்பட்டி பிரிவு பகுதியில் பயணியர் நிழற்கூடத்தின் கூரை, ஜன்னல் பகுதி சேதமடைந்து கிடக்கிறது.
-கதிரேசன், அய்யலுார்.
ஆய்வு செய்யப்படும்
ஆய்வு செய்து சீரமைப்பு பணி செய்ய நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்படும்.
- -குமரவேல், ஊராட்சி செயலாளர், சுக்காம்பட்டி.
-------------------தீயில் எரியும் குப்பை
வேம்பார்பட்டி ரோட்டில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதார பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
-தங்க பாண்டி, அய்யாபட்டி. ஊராட்சி
நடவடிக்கை எடுக்கப்படும்
துாய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று தினமும் குப்பைகளை சேகரிக்கின்றனர். சில குடியிருப்பு வாசிகள் மட்டும் குப்பைகளை ரோட்டில் கொட்டுகின்றனர். அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-தமிழரசி கார்த்திகைசாமி,ஊராட்சி தலைவர்,கோம்பைப்பட்டி.
------------------
விபத்து அபாயம்
ஒட்டன்சத்திரம்-செம்பட்டி ரோட்டில் தருமத்துப்பட்டி அருகே சுரக்காபட்டி சந்திப்பு பகுதியில் வாகனங்களில் அதிவேக பயணத்தால் விபத்துகள் நடக்கிறது.
-சி. ஆண்டவர், சுரக்காபட்டி.
விரைவில் நடவடிக்கை
சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீஸ், நெடுஞ்சாலை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
-மருதமுத்து, தலைவர், தருமத்துப்பட்டி ஊராட்சி.