/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு 'ஆயுள்'
/
சிறுவன் கொலையில் தொழிலாளிக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 31, 2024 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோட்டையூர் சின்னையம்பட்டி பகுதி சேர்ந்த ஹோட்டல் தொழிலாளி அஜய் ரத்தினம், 22. இவரது உறவினர் வித்யா. இணையதளத்தில் வெளியான ஒரு படம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் வித்யா புகார் அளித்தார்.
அந்த புகைப்படத்தை பதிவிட்டது அஜய்ரத்தினம் என தெரிந்ததால், வித்யா வழக்கை வாபஸ் பெற்றார். இருப்பினும், வித்யா மீது அஜய்ரத்தினம் ஆத்திரத்தில் இருந்தார். 2021ல் வித்யாவின் 6 வயது மகனை அஜய்ரத்தினம், கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், அஜய் ரத்தினத்திற்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.