/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை :திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
/
அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை :திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை :திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை :திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : செப் 10, 2024 08:09 PM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஆசையாய் வளர்த்த சேவலை எடுத்து சென்ற அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் அம்பாத்துறை கூலித்தொழிலாளி முனியாண்டி 34. இவரது தம்பி சந்தோஷ் குமார்22. இவர் 2020ல் நீண்ட நாட்களாக தனது வீட்டில் சேவல் ஒன்றை வளர்த்துள்ளார். இதை சத்தோஷ் குமாருக்கு தெரியாமல் அண்ணன், முனியாண்டி துாக்கி சென்றார். மீண்டும் சேவலை தருமாறு சந்தோஷ்குமார்,முனியாண்டியிடம் கேட்டார். முனியாண்டி தராததால் ஆத்திரத்தில் சந்தோஷ்குமார் கத்தியால் முனியாண்டியை குத்தி கொலை செய்தார். அம்பாத்துறை போலீசார் சந்தோஷ்குமாரை,கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன்வழக்கு திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக மகேந்திரன் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாரதா,குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.