ADDED : மார் 13, 2025 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அருள்ஜோதி வீதி சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி 58ம் ஆண்டு மகா ருத்ர மகா யாகம் மார்ச் 9 ல் வாஸ்து ஜெபத்துடன் துவங்கியது.
கங்கா தீர்த்தத்துடன், சோடச ஸஹஸ்ர மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. திருஆவினன்குடியிலும் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. மார்ச் 10,11,12 ல் தொடர் ருத்ர யாகம் ,நேற்று காலை பூர்ணாஹூதி தீபாராதனை, பழநியாண்டவர் தரிசனம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.