sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கண்டிப்பு காட்டலாமே பொது இடத்தில் புகைக்கும் பழக்கத்தால் பலரும் பாதிப்பு

/

கண்டிப்பு காட்டலாமே பொது இடத்தில் புகைக்கும் பழக்கத்தால் பலரும் பாதிப்பு

கண்டிப்பு காட்டலாமே பொது இடத்தில் புகைக்கும் பழக்கத்தால் பலரும் பாதிப்பு

கண்டிப்பு காட்டலாமே பொது இடத்தில் புகைக்கும் பழக்கத்தால் பலரும் பாதிப்பு

1


ADDED : செப் 08, 2024 05:18 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ்நாடு புகைபிடித்தல், புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தடுப்பு சட்டம் 200-2-03 தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இந்திய குடியரசு தலைவரால் 2003 பிப்ரவரியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் விதி 1 முதல் 3 -ன் படி பொது இடங்களில் புகைப்பிடித்தலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தலோ தண்டனைக்குரிய குற்றமாகும். விதி 11ன் படி அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலர்களின் திடீர் ஆய்வின்போது, மேற்கண்ட குற்றங்கள் கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

இவ்வாறு சட்டம் இருப்பது குறித்து துண்டுபிரசுரங்களை சுகாதார துறையினர் எப்போதாவது பொதுமக்களிடம் வினியோகிப்பர். சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து அபராத நடவடிக்கைகளிலும் இறங்குவதையும் எப்போதாவது பார்க்கலாம். ஆனால் களத்தில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லை. புகைப்பவரை காட்டிலும் உடன் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றனர். இதனாலே ஆண்டுதோறும் மே 31 ல் உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது . பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்களிடம் மாற்றம் ஏற்படும்.






      Dinamalar
      Follow us