ADDED : ஏப் 27, 2024 05:41 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஏப்.25 இரவு 10:30 மணிக்கு பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ் நின்றது.
இதன் பின்புறத்தில் உள்ள டிஜிட்டல் பெயர் பலகையில் குழப்பமான எழுத்துக்கள் வந்தது. இதைப் பார்த்த பயணிகள் குழப்பமடைந்தனர். திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து, போக்குவரத்து கழக எலக்ட்ரீசியன், டெக்னீசியன், மேற்பார்வையாளர் என மூவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
