sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு வேலைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

/

அரசு வேலைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

அரசு வேலைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

அரசு வேலைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்; அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு


ADDED : மார் 08, 2025 06:17 AM

Google News

ADDED : மார் 08, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பட்டி: 'அரசு துறை வேலை வாய்ப்பிற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

சொக்கலிங்கபுரம், போடிக்காமன்வாடி, கூலம்பட்டியில், சமுதாயக்கூடம், அங்கன்வாடி, ரேஷன் கடை, உணவு தானிய கிட்டங்கி கட்டடங்களை திறந்து வைத்து அவர் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் , திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடையும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். படித்த இளைஞர்களுக்கு அரசு துறை வேலை வாய்ப்பிற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது சொக்கலிங்கபுரம் வழித்தடத்தில் விரைவில் அரசு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) கருப்புசாமி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மகேஸ்வரி, பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, அருள்கலாவதி முன்னிலை வகித்தனர்.






      Dinamalar
      Follow us