sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து

/

வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து

வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து

வயநாடு மக்களுக்கு உதவ மொய் விருந்து

2


ADDED : ஆக 08, 2024 11:01 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:01 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் இங்கு இரு இடங்களில், 'முஜிப் பிரியாணி' என்ற பெயரில் பிரியாணி கடை நடத்துகிறார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களுக்கு உதவ, திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதி ேஹாட்டலில் மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 11:00 மணி வரை நடந்தது.

முதல் கட்டமாக 700 பேருக்கு பிரியாணி, இனிப்பு, சிக்கன் 65, முட்டை, தோசை, இட்லி என 10 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன. 1,300 பேருக்கு மேல் விருந்தில் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்ற மக்கள், சாப்பிட்ட இலையின் கீழ், 500 - 2500 ரூபாய் வரை மொய் வைத்தனர்.

இந்த மொய் விருந்து மூலம் 2.16 லட்சம் ரூபாய்கிடைத்தது. இந்த பணத்தை விரைவில், கேரளா அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக, உரிமையாளர் முஜிபுர் ரகுமான் கூறினார்.






      Dinamalar
      Follow us