ADDED : ஜூலை 26, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: பாகாநத்தத்தில் நாட்டுக்கோழி வளர்ப்போர் சங்கம், திண்டுக்கல் பெஸ்வா யோகா, இயற்கை மருத்துவ மையம், ஜி.டி.என்., யோகா, இயற்கை மருத்துவக் கல்லுாரி, ஸ்ரீ சாய் ஆயுர்வேதா கிளினிக் இணைந்து இயற்கை பொது மருத்துவ முகாம் நடத்தின.
மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி நிக்கோலஸ் தலைமை வகித்தார். நாட்டுக்கோழி வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் அசோகன், பொருளாளர் சோமன், நிர்வாகிகள் கருப்பையா, சுரதா முன்னிலை வகித்தனர். இயற்கை மருத்துவ டாக்டர்கள் தேவராஜா, நவீன் பிரசாத், சித்தா டாக்டர் சபரிமுகுந்த பிரியன், ஓமியோபதி டாக்டர்கள் தீபன் பால்ராஜ், பூவிழி சிகிச்சை தந்தனர்.
