/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராகி அம்மனுக்கு நவராத்திரி விழா
/
வாராகி அம்மனுக்கு நவராத்திரி விழா
ADDED : ஜூலை 08, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடந்தது.
லகு வாராகி ஹோமம் நடந்தது. காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இன்று அஸ்வாரூடா வாராகி ஹோமம், சிம்ருட வாராகி ஹோமம், ஜூலை 10 பஞ்சமி திதி அன்று ஊஞ்சல் உற்ஸவம் விளக்கு பூஜை நடக்கிறது. தினமும் அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை வரசித்தி வாராகி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.