ADDED : மார் 03, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : காசநோய் ஒழிப்பு, தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஆத்துார் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது. டாக்டர் அரவிந்த் நாராயணன் தலைமை வகித்தார்.
மருத்துவ அலுவலர் சத்திரப்பிரியா, நலக்கல்வியாளர் சென்றாயப்பெருமாள், அச்சாணி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். சுண்டல், பாசிப்பயறு, பச்சைப்பயறு, முட்டை, நிலக்கடலை, பருப்பு ஆகிய பொருட்கள் கொண்ட பெட்டகம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் ஏற்பாடுகளை செய்தனர். -