/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெருமாள் கோவில் பட்டியில் அதிகாரிகள் ஆய்வு
/
பெருமாள் கோவில் பட்டியில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : பிப் 10, 2025 05:27 AM
நிலக்கோட்டை,: ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி ஆய்வு செய்தார்.
நிலக்கோட்டைஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிள்ளையார்நத்தம் ஊராட்சி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்தில் நாற்றங்கால் வளர்ப்பு திட்டம், 15வது மத்திய நிதி ஆணைய நிதி ரூ.7.30 லட்சத்தில் 10,000 லிட்டர் மேல்நிலை குடிநீர் தொட்டி, குல்லலக்குண்டு ஊராட்சி, சிங்கம்பட்டியில் ரூ.1.41 லட்சத்தில் கிடைமட்ட ஊறவைக்கும் குழி அமைத்தல், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் தலா ரூ.1.70 லட்சத்தில் வீடுகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 லட்சத்தில் வீடுகள், ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்டத்தில் ரூ.5.69 லட்சத்தில் பொது சுகாதார வளாகம், மயான பகுதியில் ரூ.9.90 லட்சத்தில் ரோடு, தண்ணீர் வசதி போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.