/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு வரி செலுத்தாத ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.1.75 லட்சம் அபராதம்
/
ரோடு வரி செலுத்தாத ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.1.75 லட்சம் அபராதம்
ரோடு வரி செலுத்தாத ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.1.75 லட்சம் அபராதம்
ரோடு வரி செலுத்தாத ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.1.75 லட்சம் அபராதம்
ADDED : பிப் 22, 2025 02:23 AM

திண்டுக்கல்:முறையான தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் மதுரையிலிருந்து பெங்களூருவிற்கு பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ்சை திண்டுக்கல் அம்மைநாயக்கனுார் அருகே போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் முறையான ரோடு வரி, தகுதிச்சான்று இல்லாமல் செல்வதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அம்மைநாயக்கனுார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகாலாந்து பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் மதுரையிலிருந்து பெங்களூருக்கு பயணிகளை ஏற்றி வந்தது.
அதிகாரிகள் சோதனை செய்ததில் பஸ்சிற்கு தகுதிச்சான்று, ரோடு வரி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இல்லாதது தெரிந்தது. அந்த பஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனர். பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.