/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் கோயிலில் பூக்குழி கண் திறப்பு
/
நத்தம் கோயிலில் பூக்குழி கண் திறப்பு
ADDED : மார் 15, 2025 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பூக்குழி திருவிழா மார்ச் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்து வருகிறது. நேற்று காலை பூக்குழி பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.தொடர்ந்து கோவிந்தா கோஷம் முழங்க கோயில் முன்பாக பூக்குழி கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம் ,தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.