sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி யாக பூஜை

/

வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி யாக பூஜை

வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி யாக பூஜை

வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் பஞ்சமி யாக பூஜை


ADDED : ஜூன் 27, 2024 06:20 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி, : சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமியாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மழை வேண்டி நடந்த இந்த பூஜையில் கலசங்களுக்கு அலங்காரம் செய்து, வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராஹி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார்.

யாக பூஜையில் வரசித்தி வாராஹி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக அஸ்வாருட வாராஹியாக காட்சி தந்தார். திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராஹி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us