/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பன்னீரால் வந்தது வினை;அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
/
பன்னீரால் வந்தது வினை;அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
பன்னீரால் வந்தது வினை;அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
பன்னீரால் வந்தது வினை;அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
ADDED : மார் 03, 2025 07:09 AM
வத்தலகுண்டு ; திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலர் மோகன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்த மோகன், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வத்தலகுண்டு அ.தி.மு.க., ஒன்றிய செயலராகவும், பின்னர் பிரிக்கப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலராகவும் இருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின், பன்னீர்செல்வம் அணியில் இவரது மகன் அருண்குமாரும், அ.தி.மு.க.,வில் இவரும் செயல்பட்டனர். மோகன் வீட்டில் சமீபத்தில் நடந்த சுப நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
இந்நிலையில், மோகன் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுச்செயலர் பழனிசாமி நேற்று காலை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மோகன், தன் ஆதரவாளர்களுடன் பெரியகுளத்தில், பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவில் இணைந்தார்.