sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிராமசபை நடத்துவதில் கோஷ்டி; அலைக்கழிப்பால் தருமத்துப்பட்டி மக்கள் அவதி

/

கிராமசபை நடத்துவதில் கோஷ்டி; அலைக்கழிப்பால் தருமத்துப்பட்டி மக்கள் அவதி

கிராமசபை நடத்துவதில் கோஷ்டி; அலைக்கழிப்பால் தருமத்துப்பட்டி மக்கள் அவதி

கிராமசபை நடத்துவதில் கோஷ்டி; அலைக்கழிப்பால் தருமத்துப்பட்டி மக்கள் அவதி


ADDED : ஜூலை 03, 2024 05:56 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி : தருமத்துப்பட்டியில் ஊராட்சியில் கோஷ்டி பூசலால் தலைவர், செயலர் பங்கேற்காத நிலையில் துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் தருமத்துப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தை கவனிப்பதில் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் சிலர் ஒரு பிரிவாகவும், ஊராட்சி செயலர் இன்னாசி மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஊராட்சி அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மெயின் ரோட்டில் தனி அலுவலகம் அமைத்து ஊராட்சி செயலர் வரி வசூல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகிறார்.

இச்சூழலில் கலைஞர் கனவு இல்ல திட்டம் குறித்த சிறப்பு கிராமசபையை நேற்று நடந்த நிலையில் தருமத்துப்பட்டி ஊராட்சியில் இருவேறு இடங்களில் கிராமசபை நடத்த உள்ளதாக தகவல் பரவியது.காலை 11:00 மணிமுதல் மனு கொடுக்க ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மதியம் 12:50மணிக்கு துணைத்தலைவர் கிருஷ்ணன் செவனக்கரையான்பட்டி ரோட்டில் உள்ள கலையரங்க கட்டடத்தில் கூட்டத்தை துவக்கினார். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன் அங்கு வந்தார். ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பங்கேற்ற நிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர், ஊராட்சி செயலாளர் வரவில்லை.






      Dinamalar
      Follow us