sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு பஸ் பாடியில் டயர் உரசி புகை நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணியர்

/

அரசு பஸ் பாடியில் டயர் உரசி புகை நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணியர்

அரசு பஸ் பாடியில் டயர் உரசி புகை நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணியர்

அரசு பஸ் பாடியில் டயர் உரசி புகை நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணியர்


ADDED : ஜூலை 26, 2024 11:44 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை:திண்டுக்கல்லில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்பட்டு வடமதுரை, அய்யலுார் வழியே மாமரத்துப்பட்டிக்கு மாலை 5:35 மணிக்கு சென்றடையும் அரசு டவுன் பஸ், நேற்று மாலை வடமதுரை வந்தது. பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பயணியர் ஏறினர். இதனால் பஸ் ஒரு பக்கம் சாய்ந்த நிலையிலே வடமதுரை நான்கு வழிச்சாலையை அடைந்தது.

பஸ் பாடியின் மீது டயர் உரசியதால் கடும் சத்தத்துடன் புகை வர துவங்கியது. டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அதிக பயணியர் ஏறியதுதான் பிரச்னைக்கு காரணம் என கண்டறிந்தனர்.

அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சில பயணியரை இறக்கி விட்டனர். அதன்பின் பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது.

போலீசார் கூறுகையில், 'இதே நேரத்தில் வர வேண்டிய மற்றொரு பஸ் நடுவழியில் பழுதாகி நின்றதால், இந்த பஸ்சில் கூடுதல் பயணியர் ஏறினர். இதனால் பிரச்னை ஏற்பட்டது' என்றனர்.






      Dinamalar
      Follow us