sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...

/

ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...

ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...

ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...


ADDED : ஆக 19, 2024 01:14 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீர்கேடான பஸ் ஸ்டாப்

ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு கரட்டுப்பட்டி பஸ் ஸ்டாப்பில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசாமி,கம்பளிநாயக்கன்பட்டி.-----ரோடு பள்ளத்தால் ஆபத்து

தென்னம்பட்டியிலிருந்து பிலாத்து செல்லும் வழியில் பூஞ்சோலை அருகே ரோடு வளைவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழித்தடத்தில் வரும் டூவீலர்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றன. ரோடு வளைவை அகலப்படுத்த வேண்டும். --- பிரகாஷ், வடமதுரை.-----

பயன்பாடில்லாத பூங்கா

கள்ளிமந்தையம்- ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் சின்னையகவுண்டன் வலசு அருகே நெடுஞ்சாலைத் துறை பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன் ஒட்டன்சத்திரம்.-----

அச்சுறுத்தும் குரங்குகள்

கோபால்பட்டி வேம்பார்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர். குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கடேச பெருமாள், வேம்பார்பட்டி.------

மக்களை துரத்தும் நாய்கள்

பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றுகின்றன. இதனால் பொதுமக்கள்,குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும். சண்முகம், பழநி.------குப்பையால் உருவாகும் சீர்கேடு

திண்டுக்கல் மாலப்பட்டி - தோட்டனுாத்து ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்குமார், மாலப்பட்டி.------

கொசு உற்பத்தியாகும் கழிவுநீர்

பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் சாக்கடை கால்வாய் துார் வாராமல் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. அதிகாரிகள் கால்வாயை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமார்,பழநி. -------

......................................






      Dinamalar
      Follow us