ADDED : மார் 10, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கரூர் மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி காளிமுத்து 30.
இவர், தனது மனைவி அபிராமி 28, மகள் இஷா ஸ்ரீ 12, ஒரு வயது மகன் ஆகியோருடன், வேடசந்துார் கோடாங்கிபட்டி உறவினர் வீட்டுக்கு வந்து மீண்டும் தனது ஊருக்கு டூவீலரில் சென்றனர்.
திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் ரங்கமலை கணவாய் அருகே டூவீலர் வந்தபோது பின்னால் வந்த கார், இவர்கள் மீது மோதியது.
மூவரும் காயமடைந்தனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.