ADDED : செப் 07, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
10 பேர் மீது வழக்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோட்டில் வ.உ.சி.,பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் வந்த அரசு பஸ்சை வழி மறித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பஸ்மீது ஏறி நின்று நடனம் ஆடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடக்கு போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.