sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோட்டையூர் காளியம்மன் கோயிலில் பூக்குழி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

கோட்டையூர் காளியம்மன் கோயிலில் பூக்குழி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோட்டையூர் காளியம்மன் கோயிலில் பூக்குழி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோட்டையூர் காளியம்மன் கோயிலில் பூக்குழி விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : மார் 27, 2024 06:58 AM

Google News

ADDED : மார் 27, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : நத்தம் அருகே கோட்டையூர் காளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.இதன் விழா மார்ச் 17 ல் தீர்த்தம் அழைத்து வர காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 24 இரவு அம்மன் சிலை கொண்டு வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை பக்தர்கள் முளைப்பாரி, அக்னிசட்டி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

இதன் பின் மாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோட்டையூர் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த 500 -க்கு மேற்பட்டோர் கை குழந்தைகளுடன், அலகு குத்தி வரிசையாக இறங்கினர். இரவு அம்மன் வானவேடிக்கைகளுடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us